“எங்க படம்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா..?” ; தமிழக அரசு மீது தமிழ்படம்-2 இயக்குனர் வருத்தம்


சர்கார் படத்திற்கு எழுந்த தொடர் பிரச்னைகளால், கடந்த இரண்டு தினங்களாக எங்கு பார்த்தாலும் அந்தப்படம் பற்றிய பேச்சாக தான் இருக்கிறது. எப்படி மெர்சல் படத்திற்கு பிஜேபி மூலம் பப்ளிசிட்டி கிடைத்ததோ, அதைவிட சர்கார் படத்திற்கு அதிமுக மூலம் கூடுதலாக பப்ளிசிட்டி கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அதேசமயம் சில மாதங்களுக்கு முன் தமிழக அரசியலையும் சில ஆளுங்கட்சி தலைவர்களையும் குறிப்பாக பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலரை மரண கலாய் கலாய்த்து ‘தமிழ்படம்-2’ வெளியானது. ஆனால் அந்தப்படத்தை ஒருவர் கூட கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து தற்போது தமிழ்ப்படம் 2 படங்களை இயக்கி சிஎஸ் அமுதன் டுவிட்டரில் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். “எங்களுக்கு இந்த மாதிரி ஒரு விளம்பரம் கிடைக்கவில்லை என்பதால் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். நாங்களும் அரசை விமர்சிக்க கடுமையாக முயன்றோம். இந்த பாரபட்சத்தை ஏற்க முடியாது. நாங்கள் சர்காருக்குத் துணை நிற்கிறோம்” என பதிவிட்டிருக்கிறார்.