
கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. தங்களது வாழ்வாதாரத்திற்காகத் திருட்டு மற்றும் கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்தான் படத்தின் நாயகன் தேஜேஷ் ராஜன். அவர் தனது வாழ்விற்காகவும் தனது சமூகத்திற்காகவும் பல குற்றங்களைச் செய்தாலும் அதுவரை தப்பித்துவிடுகிறார்..
ஒரு கட்டத்தில், ஐரா அகர்வாலின் தந்தையான சுரேஷ் மேனனை அவர் கொன்றுவிடுகிறார். தன் தந்தையின் கொலையாளியைக் கண்டுபிடித்துக் கொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐரா அகர்வால் களமிறங்குகிறார். ஆனால் எதிர்பாராதவிதமாகச் சூழ்நிலைகள் மாறுகின்றன; நாயகன் தேஜேஷ் ராஜன் ஐராவைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஒரு ஆபத்தான கும்பலிடமிருந்து தப்பித்து, ஒருவரைக் ஒருவர் காப்பாற்றிக் கொள்ள இருவரும் இணைந்து மேற்கொள்ளும் பயணமும், அந்தப் பயணம் அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறது என்பதும்தான் ‘அமரம்’ படத்தின் முக்கியக் கதைக் கருவாகும்.
அறிமுக நடிகராக இருந்தாலும், பல காட்சிகளில் தனது நடிப்பால் ஆச்சரியப்படுத்துகிறார் தேஜேஷ் ராஜன். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர் காட்டியுள்ள உழைப்பும், அவரது ஸ்கிரீன் பிரெசென்ஸும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் நல்ல இடத்தைப் பிடிக்கலாம்..
ஐரா அகர்வால் நாயகியாகக் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு, படம் முழுவதிலும் தன் கதாபாத்திரத்தை சிறப்பாகத் தாங்கிப் பிடித்துள்ளார்.
‘மாமா மொசார்ட்ஸ் என்ற வேடத்தில் பார்வையாளர்களின் மனதைத் தொடும் அளவிற்கு உணர்ச்சிகரமான நடிப்பை ஜார்ஜ் மரியான்:வழங்கியுள்ளார்.
சாய் தீனா: வில்லத்தனமான சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ளார், நாகி நீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் மிகையாக இல்லாமல், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.
இசை மிக்கி ஜே மேயரின் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், சில இடங்களில் அவை படத்தின் வேகமான ஓட்டத்தைக் குறைக்கின்றன. ஆனால், பின்னணி இசை மிகவும் அருமையாக அமைந்தது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
படத்தின் கதைக்களமான மலைப்பகுதியைத் தத்ரூபமாகவும் நேர்த்தியாகவும் கேமராவில் பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பரத் குமார்.
ஸ்ரீ ராமின் படத்தொகுப்பு படத்தின் பல காட்சிகளைச் சுறுசுறுப்பாகவும் ஈர்க்கும் வகையிலும் வைத்திருக்க உதவுகிறது.
மிராக்கல் மைக்கேலின் சண்டைக் காட்சிகளின் அமைப்பு படத்தின் முக்கிய ஹைலைட்டுகளில் ஒன்றாகும். இது போன்ற சண்டை இயக்கங்களை மேலும் பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது.
இயக்குனர் திரு அருள் கிருஷ்ணா, புதிய முகங்களை வைத்துக்கொண்டு, ஒரு சுவாரஸ்யமான சர்வைவல் டிராமாவைத் தர முயன்றுள்ளார். முதல் பாதியிலேயே திரைக்ககையை விறுவிறுப்பாக நகர்த்தி, படம் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திவிடுகிறார் இயக்குனர். இருப்பினும், இரண்டாம் பாதியில், குறிப்பாகப் பாடல்களின் தேவையற்ற இடைவேகங்கள் மற்றும் படத்தின் ஒட்டுமொத்த நீளத்தை இன்னும் கொஞ்சம் கத்தரித்திருக்கலாம்.
பெரிய நட்சத்திர நடிகர்கள் இல்லாமலேயே ஒரு திரைப்படம் எந்தளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ‘அமரம்’ ஒரு நல்ல உதாரணம். புதிய முகங்கள், பலமான கதைக்களம் மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் இயக்குனர் திரு அருள் கிருஷ்ணா தனது சொந்தத் திறமையை நம்பி இப்படத்தைக் கொடுத்துள்ளார். சில தர்க்கப் பிழைகள் மற்றும் குறைகள் இருந்தாலும், இந்த புதிய முயற்சியின் பின்னுள்ள உழைப்பு நிச்சயமாகப் பாராட்டுக்குரியது.









