
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “கோடித்துணி” நாவலை படமாக திரையில் கொண்டு வந்துள்ளார்கள் நாவலில் இருந்த அழுத்தம் எமோஷன் மாறாமல் படமாக்கி இருக்கிறார்களா ?
கணவனை இழந்த அங்கம்மாள்.. அவருக்கு இரண்டு பையன்கள்.. ஒருவர் பரணி.. மற்றொருவர் சரண் சக்தி.. சரண் ஒரு டாக்டர்.. அவர் ஒரு பெண்ணை விரும்ப அந்த பெண் வீட்டில் இருந்து ஒரு நாள் சரணையும் அவர் குடும்பத்தையும் பார்க்க வருவதாக சொல்கிறார்கள்.
அதனால் சரண் வாழ்நாள் முழுவதும் ஜாக்கெட் அணியாத தனது அம்மாவை அணிய சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அங்கம்மாள் மறுக்கிறார். அதன்பின் நடக்கும் சம்பவங்கள் மீதிக்கதை……
அங்கம்மாளாக கீதா கைலாசம் நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்பதே உண்மை… எந்த இடத்திலும் கதாபாத்திரத்தை விட்டு வெளியே வராத அவரது நடிப்புக்கு விருது நிச்சயம்.
சரண்,பரணி மற்றும் தென்றல் என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் கச்சிதம்.. சரணின் நண்பராக நடித்திருக்கும் சுதாகர், சிறுமி யாஷ்மின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அங்கம்மாளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
முகமது மக்ஃபூல் இன் பிண்ணனி இசையும் அன்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது
குறைகள் இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாகவும், திரைக்கதையாகவும் நல்ல தரத்தில் உருவாகியிருக்கிறார் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன். ஒருபக்கம் மாஸ் மசாலா இல்லாத எதார்த்தமான படம் என்பதால் சில இடங்களில் பொறுமையாக இருக்கலாம் சிலருக்கு. ஆனால் மொத்தத்தில் எதார்த்தமான கிராமத்து மக்களின் இயல்பை சொல்லக்கூடிய அழகான படம்.









