
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சரத்குமார் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத் ஆகியோருடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். சரத்குமாருக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை அதற்காக சிறுக சிறுக பணத்தை சேமிக்கிறார்.
ஆனால் அடுத்தடுத்த வரும் தடைகள் சொந்த வீடு வாங்குவதற்கு தடையாக உள்ளது. தான் நினைக்காததை தன் மகன் செய்து முடிப்பான் என்று சித்தார்த்தன் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார் சரத்குமார். தொடர்ந்து கல்லூரியில் சேரும் சித்தார்த் சரிவர படிப்பு வராததால் வேலைக்கு அல்லல்படும் நிலை ஏற்படுகிறது.
அப்பாவின் கனவு சொந்த வீடு கனவு, மகனின் கனவாக மாறினாலும், ஒட்டு மொத்த குடும்பத்தின் நிறைவேறாத கனவாகவே பயணிக்க, இறுதியில் என்னவானது? என்பதை நடுத்தர குடும்பத்தினர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களோடு சொல்லியிருப்பது தான் ’3 பி.ஹெச்.கே’.
சரத்குமாரின் மகனாக நடித்திருக்கும் சித்தார்த் நடிப்பில் பல பரிமாணங்களில் நடுத்தர குடும்பத்தில் வாழும் இளைஞராக இயல்பான நடிப்பில் பாராட்டும்படி நடிக்கிறார்
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக மிக இயல்பான நடிப்பு. சொந்த வீடு கனவை எப்போதும் சுமந்து திரியும்போதும், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கி, பின்னர் காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மாற்றத்துக்கு தயாராகும் காட்சிகளில் மனதை கவர்ந்து விடுகிறார் சரத்குமார்.
சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் மீதா ரகுநாத், சித்தார்த்தின் தோழியாக நடித்திருக்கும் சைத்ரா, யோகி பாபு என நடித்தவர்கள் அனைவரும் திரைக்கதைக்கு பக்க பலம் .
அம்ரித் ராம்நாத் இசையும் , ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன்.பி மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
8 தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷின் மூன்றாவது படம். மிக எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்தவரை அலுப்பு தட்டாமல் பல இடங்களில் நெகிழ வைத்தும், சுவாரஸ்யத்துடனும் தந்திருக்கிறார். சொந்த வீடு என்ற கருவை வைத்துக்கொண்டு, நடுத்தர குடும்பத்தினர் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் திரைக்கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்.









