Reviews

பறந்து போ ; விமர்சனம்


ஹீரோ சிவா அவர்கள் சென்னை சிட்லபாக்கம் ஏரியாவில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி தான் கிரேஸ் ஆண்டனி. இவர்களுக்கு மிதுல் ராயன் என்ற ஆண்டனி. மகன் இருக்கிறார்.. தன்னுடைய மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் சிவா. அதற்காகவே இவர் இஎம்ஐ வீடு, பைக் என்று எல்லாமே வாங்கி வைத்திருக்கிறார்

பள்ளிக்கூட விடுமுறை நாள்; ஆதலால், மகன் மிதுல் ராயன் பாதுகாப்பாக வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, ஆர்கானிக் பொருட்களை விற்கும் வேலை நிமித்தம் அப்பா சிவா வெளியே போயிருக்கிறார். துணிக்கடை வைத்திருக்கும் கிரேஸ் ஆண்டனி வேலை விஷயமாக கோயம்புத்தூர் செல்கிறார்.

இதற்கிடையே, சந்தர்ப்ப சூழ்நிலையால் இருசக்கர வாகனத்தில் தன் மகனுடன் நீண்ட தூரம் பயணிக்கும் மிர்ச்சி சிவா, தனது மகனின் உண்மையான விருப்பம் மற்றும் அவன் வாழ நினைக்கும் வாழ்க்கைப் பற்றி எப்படி தெரிந்துக் கொள்கிறார், என்பதை சிரித்து மகிழும்படி சொல்வதே ‘பறந்து போ’.

நடிகர் சிவா அவர்கள் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஷிவா எது பேசினாலுமே பார்வையாளர்கள் ரசிக்கத் தொடங்கிவிடுகின்றனர். ஒரு குழந்தையின் ஆசையை தந்தை எப்படி நிறைவேற்றுவார் என்பதை மிர்ச்சி சிவா சிறப்பாக செய்திருக்கிறார்

சிவாவின் மனைவியாக நடித்திருக்கும் மலையாள வரவான கிரேஸ் ஆண்டனி கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். சிவாவின் மகனாக நடித்திருக்கும் மிதுல் ரியான் செய்யும் குறும்புகள் ரசிக்கவும் ,சிரிக்கவும் வைக்கிறது.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி, அவரது கணவராக நடித்திருக்கும் மலையாள நடிகர் அஜு வர்கீஸின் திரை இருப்பு மற்றும் அவர்களது நடிப்பு கைதட்டல் பெறுகிறது.

இக்கதைப்படி, நாயகன் யார் என்று பார்த்தால், அது சிறுவன் மிதுல் ரியான் தான்.. அந்த அன்பு கதாபாத்திரம். அத்தகைய ஜனரஞ்சகமான, அதே நேரத்தில் மிகவும் சிக்கலான கதாபாத்திரத்தை ஏற்று, ரசிக்கத்தக்க விதத்தில், மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறான் சிறுவன் மிதுல் ரியான்.

நாம் சாதாரணமாக கடந்து செல்லும் மலைகள், மரங்கள், குலங்கள், பழங்காலத்து சாலை மண்டபம் என அனைத்தையுமே ரசிக்கும்படி காட்சிப்படுத்தி ஒரு பயணத்தை மேற்கொள்ளும் ஆவலை தூண்டுகிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.. .

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் பாடல்களாக அல்லாமல் வசனங்களாக மனதை வருடுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நேர்த்தி.

பிள்ளைகளின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களின் உண்மையான உலகம் ஆகியவற்றுடன் நம்மையும் பயணிக்க வைத்து, வாழ்ந்தால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும், என்று நினைக்க வைக்கும் இயக்குநர் ராம்ஒரு தந்தை மகன் இடையான ஒரு புரிதலை அழகாக காண்பித்திருக்கிறார். படத்தில் பெரிதாக ஆக்சன் காட்சிகள் இல்லை என்றாலும் ஒரு எதார்த்தமான மிடில் கிளாஸ் குடும்ப கதையை காண்பித்திருக்கிறார்,