
நாயகன் ஷேன் நிகம், சாந்தனு மற்றும் இரு நன்பர்க எல்லாமாக சேர்ந்து கபடிக்குழுவில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பண ஆசைக்காட்டி தன் பக்கம் இழுக்கிறார் கந்து வட்டி மாஃபியா செல்வராகவன், விளையாட்டுக்காக போனவர்கள் பழக்கத்திற்காக வன்முறை பாதைக்கு போக எல்லாமே தலைகீழாகிறது. சூழலில் சாந்தனுவை ஆபத்து சூழ்கிறது.அதிலிருந்து அவரை மீட்க ஷேன் நிகம் களமிறங்குகிறார். அதன் விளைவுகள் என்னென்ன என்பது மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஷேன் நிகம், கபடி வீரருக்கான அத்தனை உடல்மொழியையும் அசால்டாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் வியக்க வைக்கிறார். காதலியைக் கண்டால் மட்டும் தன்வசம் இழந்து விடுவது, கபடி ஆட்டத்தில் கலக்குவது எதிரிகளைப் பந்தாடுவது என்று அந்த பாத்திரத்தில் சரியாகவே செயல்பட்டுள்ளார்.
நல்லவரா? அல்லது கெட்டவரா? என்று கணிக்க முடியாத கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் சாந்தனுவுக்கு இது நற்பெயர் பெற்றுத் தரும் வேடமாக அமைந்திருக்கிறது.
குறைவான காட்சிகள் இருந்தாலும் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார் ப்ரீத்தி அஸ்ரானி..
அன்பாக பேசி வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் விதத்தில் படத்திற்கு மிக கூடுதல் பலத்தை சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
சோடா பாபு பாத்திரத்தில் வரும் அல்போன்ஸ் புத்திரன் அலட்டாமல் வில்லத்தனம் காட்டி மிரட்டுகிறார்.
இந்த ஆக்ஷன் படத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்குச் சண்டைப் பயிற்சியாளர்கள் பெரும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது.
விளையாட்டில் வீரர்களாக இருக்கும் நண்பர்கள் அவர்களுக்கே தெரியாமல் தாதாக்கள் பிடியில் சிக்கி வன்முறைச் சூழலுக்கு இடம் மாறுகிறார்கள் என்பதை கபடி விளையாட்டையும் கபடி வீரர்களையும் இணைத்து ஒரு அதிரடி ஆக்சன் படமாக நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் உன்னி சிவலிங்கம்..









