Reviews

மெல்லிசை ; விமர்சனம்


தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் கிஷோர்.. இசை மீது தீராத ஆசைக்கொண்டவர். மனைவி, மகன், மகள் என அன்பான குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாலும் கிஷோருக்கு எப்படியாவது பாடகராக வேண்டும் என்பது கனவு. ஆனால் அவரது குரலுக்கு பெரும் ரசிகையாக இருக்கும் அவரது மகள் தன் தந்தையை வற்புறுத்தி தனியார் தொலைக்காட்சியில் பாட்டு போட்டியில் கலந்த கொள்ள வைக்கிறார். அந்தப் போட்டியில் ராஜன் பல சுற்றுகளில் திறமையாக முன்னேறி வெற்றி பெற்று புகழடைகிறார். இந்த சூழலில் இருந்து கிஷோர் எப்படி வெளியே வருகிறார்? அவரது வாழ்க்கை என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை.

நல்ல கணவனாக, நட்பு நிறைந்த ஆசானாக, ரசனை மிகுந்த கலைஞனாக கிஷோர் மிகவும் ஈர்க்கிறார். ராஜன் என்கிற அந்தக் கதாபாத்திரமாகவே தோன்றி நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட் தோற்றமும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பும், படத்துக்கு பலமாக அமைந்திருக்கின்றன.

குழந்தை நடிகர்கள் தனன்யா வர்ஷினி மற்றும் ஜஸ்வந்த் மணிகண்டன் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜனின் இசையில் பாடல் வரிகள். மிக அழகாக நம்முடைய காதுகளில் புரியும் வகையில் விழுகின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

நாயகனின் வீடு மற்றும் அங்கு நடக்கும் சம்பவங்களை ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தி காட்சிப்படுத்திய விதம் உண்மைக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது.

ஒரு நடுத்தர குடும்பத்தில் பெற்றோர்களின் தியாகத்தை பிள்ளைகள் புரிந்து கொள்ளாமல் நடக்கும் விதம், தந்தையின் தியாகம், தாயின் அரவணைப்பை காலம் கடந்து உணர்ந்து வருந்துவது, என்கிற வாழ்க்கை பாடத்தை நெகழ்ச்சியடையும் விதமாக கொடுத்துள்ளார் இயக்குனர் திரவ்.. குடும்பத்தாரின் ஆதரவும், அன்பும் இல்லாமல் சரிந்து போகும், சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். அன்பு இருந்தால் அவை அனைத்தையும் எளிதில் கடந்து விடலாம், என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்..

.

.