Reviews

அஞ்சான் ; விமர்சனம்


மும்பையில் இளம் கன்று பயமறியாது என்பது போல தங்களது கேங்ஸ்டர் தொழிலை வளர்த்து வருகிறார்கள் சூர்யாவும் அவரது நண்பர் வித்யுத் ஜாம்வாலும். ஆனால் எதிர்வாராத விதமாக மும்பை தாதா மனோஜ் பாஜ்பாயால் வித்யத் அவமானப்படுத்தப்பட அதற்கு பழிவாங்கும் விதமாக மனோஜ் பாஜ்பாயை தூக்கி வந்து அவமானப்படுத்தி அனுப்புகிறார் சூர்யா.

இதற்கிடையே கமிஷனர் மகளான சமந்தாவுடன் சூர்யாவுக்கு காதல் ஏற்பட அவரை ஜாலியாக சுற்றுலா சென்று வருமாறு அனுப்பி வைக்கிறார் வித்யுத் ஜாம்வால். ஆனால் அதே நேரம் இங்கே வித்யுத் ஜாம்வால் எதிரிகளால் கொல்லப்படுகிறார். விவரம் அறிந்து வந்த சூர்யாவும் துப்பாக்கியால் சுடப்பட்டு ஆற்றில் விழுகிறார். சூர்யாவுக்கு என்ன ஆனது ? மீண்டு வந்தாரா எதிரிகளை பழிவாங்கினாரா என்பது எல்லோருக்கும் தெரிந்த மீதிக்கதை

ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் பார்த்த படம் தான். அதனால் இந்த கதையை சொல்லக் கூட தேவையில்லை.எக்கொருகும் தெரிந்து இருக்கும். ஆனால் அப்போது பார்த்த படத்திற்கும் இப்போது இருக்கும் படத்திற்கும் 36 நிமிடங்கள் வெட்டப்பட்டு கிரிப்பாக இந்த படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் படம் துவங்குவது முதல் இறுதி காட்சி வரை பல இடங்களில் அதன் வரிசை மாற்றப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக நடிகர் சூரி நடித்த கதாபாத்திரம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தை பார்க்கும் போது காமெடி இல்லாமல் நிஜமாகவே விறுவிறுப்பு கூடி இருப்பது உண்மை.. ஆதலால் தாராளமாக இந்த முறை அஞ்சான் படத்திற்கு தைரியமாக சென்று பார்க்கலாம்.