
நாயகன் அஜிதேஜ் வானியல் ஆராய்ச்சி மாணவர், தனது எதிர்வீட்டில் வசிக்கும் போலீஸ் அதிகாரி மகள் ஸ்ரீஸ்வேதாவை பார்த்தவுடன் காதலிக்க துவங்குகிறார். ஆனால்.இவர்கள் காதலுக்கு இருவரின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்..இந்த சமயத்தில் 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அதிசய சூரிய கிரகணத்தை பார்க்கும் அஜிதேஜ் கண்களுக்கு ஒரு பவர் கிடைக்கிறது.
அதன்மூலம் ஒருவர் கண்ணைப் பார்த்தால் அவர்களின் மரண நாளை துல்லியமாக கணிக்க கூடிய ஆற்றல் அஜிதேஜுக்கு வருகிறது . இந்நிலையில் தனது காதலி ஸ்ரீPஸ்வேதாவின் கண்களை பார்க்க அவர் இன்னும் 7 நாட்களில் இறந்துவிடுவார் என்பதை அறிந்து அதிர்ச்சியாகிறார்.
காதலி ஸ்ரீPஸ்வேதாவை அவரால் காப்பாற்ற முடிந்ததா? இருவருக்கும் என்ன நடந்தது? 7 நாட்களில் காதலி இறந்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அஜிதேஜ் அறிமுக நடிகராக இருந்தாலும், அதற்கான அடையாளமே தெரியாத வகையில் நடித்திருக்கிறார். காதலியை காப்பாற்றுவதற்காக போராடும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
நாயகி ஸ்ரீ ஸ்வேதா காதல், சோகம், சிறு வயது முதல் அம்மாவை இழந்து சந்தேகப்படும் அப்பாவின் கொடுமை இவற்றை அனுபவிக்கும் பெண்ணின் மன உணர்வுகளை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்
அமைச்சராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன் உள்ளிட்ட நடிகர்களும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சச்சின் சுந்தர் பின்னணி இசை தனித்துவமாக இருந்தது கவனிக்க வைத்தது. ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். காட்சிகளை அழகாக காட்சிப்பத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
44 வருடங்களுக்கு முன்பாக பாக்கியராஜ் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிய படம் அந்த ஏழு நாட்கள்.அந்த தலைப்பை வைத்து காதல், ஃபேண்டஸி, சமூக விழிப்புணர்வு எல்லாவற்றையும் இணைத்து ஒரு விழிப்புணர்வு படமாக இப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் எம்.சுந்தர்..









