
கபடி விளையாட்டின் மீது வெறியாக இருக்கும் துருவ் விக்ரம், உள்ளூர் அணியுடன் விளையாட சாதி பிரச்சினை தடையாக உள்ளது. ஆனாலும் பள்ளி ஆசிரியர் தூண்டுதலின் காரணமாக போராட்டத்துக்கிடையே ஒவ்வொரு அடியாக முன்னேறுகிறார். இந்திய அணி சார்பில் விளையாடி ஜெயிக்க வேண்டும் என்ற அவரது லட்சியத்துக்கு தந்தை பசுபதி முட்டுக்கட்டை போடுகிறார்.
ஆனால், இந்த கபடி உங்கள் மகனை மிகப்பெரிய அளவிற்கு கூட்டிச் செல்லும் என PT வாத்தியார் கூறி, துருவ் விக்ரமை அடுத்தடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கிறார். இறுதியில் தடைகளை கடந்து துருவ் விக்ரம் கபடி விளையாட்டில் சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை
நாயகன் துருவ் விக்ரம், கபடி வீரராக களத்தில் நிற்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதற்கு உடல், மொழி, ஆவி என அனைத்தையும் தந்து தன்னுடைய முதல் படம் இதுதான் என்று நினைத்து அத்தனை உழைப்பையும் கொட்டியுள்ளார் உழைத்திருக்கிறார் நாயகனாக இருக்கும் துருவ் விக்ரம்.
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், துருவ் விக்ரமை விடாமல் காதலிப்பது, காதலுக்காக வீட்டை எதிர்த்து சண்டை போடுவது என கவனிக்க வைத்து இருக்கிறார். அனுபமா பரமேஸ்வரனும், ரஜிஷா விஜயனும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி,ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பெரும் சுமையைச் சுமந்து நம்மைக் கலங்க வைத்துவிடுகிறார்.
அமீர் கொடுத்த கேரக்டரில் சரியான மீட்டரில் அசத்தியுள்ளார். லால் அழுத்தமான நடிப்பால் கவனம் பெறுகிறார். அழகம்பெருமாள், அருவி மதன், அனுராக் அரோரா ஆகியோரின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.
எழில் அரசின் ஒளிப்பதிவும், பிரசன்னா கே.நிவாசின் இசையும் படத்தை தாங்கி
அழுத்தமான கதை என்பதால் கபடி விளையாட்டை மட்டும் காண்பிக்காமல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த ஜாதி கலவரங்கள், தீண்டாமை கொடுமைகளை பற்றியும் கவனமாக கையாண்டு விவரமாக இயக்குனர் மாறி செல்வராஜ் காண்பித்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.









