Reviews

டியூட் ; விமர்சனம்


தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் டியூட். இந்த படத்தை இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். இந்த படமும் அவருக்கு வெற்றி பட்டியலில் சேர்ந்ததா ? பார்க்கலாம்.

பிரதீப் ரங்கநாதனின் மாமன் மகள் மமிதா பைஜூ. அவரது தந்தை சரத்குமார். தன் முறைப்பையனான பிரதீப்பை மமிதா பைஜூ காதலிக்கிறார். ஆனால் அவருக்கு தன் மீது காதல் வரவில்லை என்று சொன்னதும் சோகத்தில் வேறு ஊருக்கு படிக்க கிளம்பி செல்கிறார் மமிதா பைஜூ.

ஆனால் அப்படி அவர் சென்ற பிறகு சில நாட்களில் அவர் மீது பிரதீப்புக்கு காதல் வருகிறது. இதை தனது மாமா சரத்குமாரிடம் சொல்ல, அவரும் தனது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் திரும்பி வரும் மமிதா பைஜூ, தான் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி இருவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்,

ஆனாலும் இவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்கிறார் சரத்குமார், இந்த சிக்கல்களை தாண்டி இவர்கள் திருமணம் நடந்ததா ? இல்லை மமிதா பைஜூ தான் விரும்பிய வரை கைப்பிடித்தாரா என்பது மீதிக்கதை.

காதல், சோகம், அழுகை என காதல், சோகம், அழுகை என காதல், சோகம், அழுகை என தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்,.. குறிப்பாக பாத்ரூமில் அழும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.

அழகு, இளமை, துள்ளல் வேடத்துக்கேற்ற நடிப்பு என எல்லாவற்றிலும் மிகச்சரியாக இந்த வேடத்துக்கு மிகப் பொருத்தமான தேர்வாக நாயகி மமிதா பைஜு இருக்கிறார்.

சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்., பார்வையிலேயே வெளிப்படுத்தும் வில்லத்தனமும், துள்ளலான நகைச்சுவையும் படத்திற்கு சுவாரசியம் சேர்த்துள்ளது. ரோகிணி, திராவிட் செல்வம், ஹிருது ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கரின் இசையில சில பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையால் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் படத்துக்கான கலர்ஃபுல் காட்சிகளை கொடுத்திருக்கிறது.

ஒரு நிமிட ரீல்ஸ் போல தங்களது எமோஷ்னலை ஷிப்ட் செய்துகொள்ளும் ஜென் சி கிட்ஸின் உளவியலைப் பிரதிபலித்து ஹீரோ கேரக்டரை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். ஆனால் தாலி கட்டுன பொண்டாட்டிய லவ் பண்ணவன் கூட பண்ணி விடுறதா கூடபோருடுக்கலாம். ஆனா தாலி கட்டுன பொண்டாட்டிய லவ் பண்ணவன் கூட படுக்க வைச்சு, புள்ளையும் பெத்துக்கிட்டு, அந்த புள்ளைக்கும் குண்டி கழுவி விட்றதெல்லாம் யப்பா.. தாங்க முடியலடா சாமி..

அந்தவகையில் பிரதீப் ரங்கநாதனை வைத்து எதை எடுத்தாலும் ஓடிவிடும் என்ற நம்பிக்கையை முதன்முறையாக இந்தப்படத்தில் அழகாக உடைந்து இருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். .