Reviews

தேசிங்குராஜா 2 – விமர்சனம்


விமல், பிந்து மாதவி, சூரி நடிப்பில் வெளியான தேசிங்கு ராஜா படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது நமக்கு தெரியும். அந்த வரிசையில் தான் இதை இரண்டாம் பாகம் என களம் இறக்கி இருக்கிறார் இயக்குனர் எழில். ஆனால் அந்த கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

பக்கத்து பக்கத்து ஏரியா காவல் நிலையத்தில் பணிபுரியும் ஊழல் நிறைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விமலும், புகழும் (பெண் போலீஸ்) இருவருக்கும் யார் பெரிய ஆள் என்கிற போட்டியுடன், எப்போதும் கேஸ் சம்மதமாக அவ்வப்போது முட்டாள்தனமாக மோதிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் இன்னொரு பிரபல தாதா மகனை கொன்ற அரசியல்வாதி ரவிமரியா மகனை பழி தீர்க்க களமிறங்குகிறார் தாதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஜனா. அரசியல்வாதி ரவிமரியா தன் மகனை பாதுகாக்க விமல் போலீஸ் குழுவை நியமிக்கிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ரவுடி ஜனா அமைச்சர் ரவி மரியாவின் மகனை சுட்டுக் கொன்றுவிடுகிறான். அமைச்சர் மகனை ஜனா கொலை செய்ய காரணம் என்ன?, பாதுகாப்பு அளிக்கும் விமலுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

காவல்துறை அதிகாரிக்குரிய எந்த இலக்கணமும் இல்லாத வேடம்,தோற்றம் ஆகியனவற்றோடு இரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் நடித்திருக்கிறார் விமல்..

திடீர் என்று சவால் இளைஞனுக்கு டூயட் எல்லாம் வரும்போதே அவர் தயாரிப்பாளர் மகன்தான் என்பது சுலபமாகப் புரியும். அதுதான் இன்னொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ஜனா.

நாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர்.பாடல்கள் இல்லையெனில் அவர்களுக்குப் பெரிய வேலை இல்லை என்று சொல்கிற மாதிரி காட்சியமைப்புகள் இருக்கின்றன..

பெண் வேடம் போட்டு நடித்திருக்கும் புகழின் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு சிரிப்புக்கு பதிலாக எரிச்சலையே வர வைக்கிறது. அமைச்சராக நடித்திருக்கும் ரவி மரியா, முதலமைச்சராக நடித்திருக்கும் ஆர்.வி.உதயகுமார், சிங்கம்புலி, லொள்ளு சபா சுவாமிநாதன், கேபிஒய் வினோத், மதுரை முத்து என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், ஜொலிக்கவில்லை. இசையமைப்பாளர் விதயாசாகரின் இசையும் கைகொடுக்கவில்லை.,

ஒரு மோசமான திரைக்கதை அமைத்து அதை காட்சி படுத்திய விதம் இந்த படத்தை இயக்குனர் எழில் தான் இயக்கினாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ஏன் இந்த மாதிரியான படங்களை கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை.. கதாநாயகனை நேர்மையான காவல்துறை அதிகாரி என்று காட்டினால் அது ஆக்‌ஷன் படம்.நகைச்சுவைப் படத்துக்கு அது தேவையில்லை என சகட்டுமேனிக்கு எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இந்த தேசிங்கு ராஜா 2.
.
.

.