Reviews

காந்தாரா சாப்டர் 1 ; விமர்சனம்


கந்தரா பிரதேசத்தில் மன்னருக்குக் கூட அதிகாரமில்லை, அங்கிருக்கும் பழங்குடியினர் மட்டுமே சுதந்திரமாக வாழ்கிறார்கள். அங்குள்ள ஈஸ்வர பூந்தோட்டத்தின் இளம் தலைவராக காந்தாரா மக்களால் கொண்டாடப்படுகிறார் ரிஷப் ஷெட்டி.

அண்டை நாட்டு மன்னர்கள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாக்கும் அவர் காடு தாண்டி நகரத்துக்கு வந்து நடக்கும் வியாபார சந்தையில் தங்கள் காட்டுப் பொருள்களை விற்க ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் அந்த சந்தை ரிஷப் ஷெட்டி வசம் வந்து விடுகிறது.

காந்தாரா மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறும் அரசர் ஜெயராம், அவர்களுடன் சமரசமாக பேசி, அவர்களுக்கான அனைத்து மரியாதையையும் வழங்குவதாக அறிவிப்பதோடு, அவர்களின் சக்திகளை கட்டுப்படுத்தி, காந்தாராவை கைப்பற்ற சதி செய்கிறார் .

ஆனால் பல சூழ்ச்சி வேலைகளைச் செய்து ஈஸ்வர பூந்தோட்டத்தை அடைய நினைக்கும் ஏமாற்றுக்காரர்களை அழித்தொழித்து, எப்படி ரிஷப் ஷெட்டி அந்த இடத்தைப் பாதுகாக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக வரும் ரிஷப் ஷெட்டி. இயக்குனராக மட்டுமில்லாமல் நல்ல நடிகராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் ஆக்ரோசம் சிலிர்க்க வைக்கிறது.. குறிப்பாக தெய்வ ஆவி ஆட்கொள்ளும் காட்சிகளில் அபாரமாக பிரகாசிக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் அழகாக இருக்கிறார். ஆரம்பத்தில் அமைதியாக வருபவர், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து ஆக்சன் காட்சிகளிலும் மிரட்டுகிறார். இவரின் கதாபாத்திரம் இறுதிக்காட்சியில் நம்மை பயமுறுத்த செய்கிறது

மகனுக்கு ஆட்சியை கொடுத்தாலும் ஆளும் அதிகாரத்தை தன்னிடத்தே வைத்துக் கொண்டு அதிகாரம் செய்யும் வயதான மன்னராக ஜெயராமுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்.. அதில் பக்காவாக பொருந்தியுள்ளார்.. அவரது மகனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.

இவர்களைத் தாண்டி, பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் துமினாட், ராகேஷ் பூஜாரி ஆகியோர் கிச்சு கிச்சு எபிசோடுக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.

.முதல் பாகத்தை போலவே இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார் காந்தாராவின் காட்டுப்பகும்திகளையும், இயற்கை காட்சிகளையும் வசீகரிக்கும் அளவில் காட்சி படுத்தி… ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கே.காஷ்யப்..

முதல் பாகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு கதையை ரிஷப் ஷெட்டி சொல்லியிருக்கிறார்., போர்க்களத்தில் சுழன்று அடிக்கும் சண்டைக் காட்சிகள் என, அனைத்திற்கும் அசாத்திய உழைப்பைத் தந்து பார்வையாளர்களுக்கு விஷுவல்களில் முழுமையான அனுபவத்தைத் தருகிறார். அதற்கேற்றாற்போல் அதேபோல், கலை இயக்குனர் பங்கலான் படம் முழுதும் உழைப்பை கொட்டியிருக்கிறார்.

படத்தில் வரும் VFX காட்சிகள் படத்திற்கு பெரிய பலம். படத்தில் நிறைய பிளஸ் இருந்தாலும் குறைகளும் இருக்கிறது. குறிப்பாக கடவுள் நம்பிக்கை தொடர்பான காட்சிகளில் கொஞ்சம் லாஜிக் இல்லாமல் இருக்கிறது. அந்தவகையில் காந்தாரா திரைப்படத்தில் இருந்த உணர்வுப்பூர்வமான கதை இந்த காந்தாராவில் மிஸ்ஸிங் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்/