
சினிமாவில் பிரபல ஹீரோவாக வlலம் வரும் கண்ணா ரவி தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். அதற்கு அவரது படங்களில் கதையில் அவர் குறுக்கீடு செய்து மாற்றுவது தான் காரணம் என பலரும் சொல்கிறார்கள். திடீரென ஒரு நாள் அவருக்கு தான் ஒரு போலீஸ் அதிகாரி போல கனவு வருகிறது. மறுநாள் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விதமாக ஒரு கதையுடன் இயக்குனர் ஒருவர் வருகிறார்.
இறந்துபோன ஒரு போலீஸ் அதிகாரியின் பயோபிக்காக உருவாகும் அந்த கதையில் கதைப்படி, கண்ணா ரவி ரகசிய போலீஸாக பயணித்து முன்னாள் ரவுடி ஒருவரை என்கவுண்டர் செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் கண்ணா ரவி ஈடுபடும் போது, அவர் என்கவுண்டர் செய்ய உள்ள சஞ்சீவ், தனது முன்னாள் காதலி வினுஷா தேவியின் கணவர் என்பது தெரிய வருகிறது..
இப்போது உயர் அதிகாரி சொன்னதை செய்வதா, இல்லை முன்னாள் காதலிக்காக தாதாவை விட்டு விடுவதா என்ற குழப்பம். கண்ணா ரவிக்கு ஏற்படுகிறது. அவர் சஞ்சீவி என்கவுண்டர் செய்தாரா ? இல்லையா ?
இது ஒரு பக்கம் இருக்க, கிளைமாக்ஸ்சில் பயோபிக் கதைப்படி போலீஸ் அதிகாரிக்கு ஏற்படும் முடிவில் கண்ணா ரவிக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் அதை மாற்ற சொல்கிறார். ஆனால் நிஜத்தில் இருப்பது போல தான் எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் பிடிவாதம் காட்டுகிறார். அதையும் சமாளித்து இந்தப்படம் உருவாகி வெளியானதா ? வெற்றிபெற்றதா என்பது இன்னொரு கிளைமாக்ஸ்.
ஒரு என்கவுன்டர் போலீஸ் அதிகாரிக்கு மனரீதியாக என்ன பிரச்சினை வருகிறது என்பதை தனது மிகை இல்லாத நடிப்பால் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார் கண்ணா ரவி, அதுமட்டுமல்ல போலீஸ், பிச்சைக்காரர், சமையல்காரர் உள்ளிட்ட அனைத்து கெட்டப்புகளிலும் கச்சிதமாக தன்னை பொறுத்திக்கொள்ளும் கண்ணா ரவி, நடிப்பிலும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
உள்ளூர் மக்களின் அன்பை பெற்ற ததா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் வெங்கட் அலட்டிக் கொள்ளாமலேயே அந்தப் பாத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதிலு கண்ணா ரவியை அவர் மோப்பம் பிடிக்கும் காட்சிகள் திக் திக் என்றால், தனது மனைவியின் முன்னாள் காதலன் என தெரிந்தும் அவருக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடத்துவது அழகு.
படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் கண்ணா ரவியின் கல்லூரி காதலியாக, சஞ்சீவின் மனைவியாக சாந்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விணுஷா தேவி தான். தனது நடிப்பால் அந்த கதாபாத்திரத்துக்கு கவுரவம் சேர்த்துள்ளார்.
வழக்கமான போலீஸ் அதிகாரியின் மனைவி போல அல்லாமல் மனைவியாக நடித்துள்ள லாவண்யா, அவருக்கு சரியான வழிகாட்டியாக இருப்பது புதிய முயற்சி.. அழகாக செய்திருக்கிறார்.
ரேகா நாயர் கதாபாத்திரமும் நடிப்பும் நமக்கு “சொர்ணாக்காவை” ஞாபகப்படுத்துகிறது. ஷ்ரவனிதா ஶ்ரீகாந்த், ஜீவா ரவி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னனி இசை மற்றும் சூரஜ் கவியின் படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்களின் பணி தொடருக்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
தாதாக்கள்…. என்கவுன்ட்டர்… அதில் என்கவுன்ட்டர் அதிகாரிகளில் சாகசங்கள், கஷ்டங்கள் என நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் நிஜ சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. என்கவுன்டர்களை நிகழ்த்துவதற்காக கண்ணா ரவி எடுக்கும் ஸ்டெப்ஸும் சஞ்சீவ் அதை எப்படி மோப்பம் பிடிக்கிறார், அதிலிருந்து தப்பிக்க எப்படி முயற்சிக்கிறார் என்பதும் மிக விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
அந்தவகையில் ஏழு தொடர்களையும் கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார் இயக்குனர் பவன்.
வேடுவன் – வெற்றியாளன்
..
.









