
தமிழக காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் மதுசூதன் ராவ். இவரது மகள் ப்ரீத்தி செஷ்விதா ஓர் இரவு திடீரென்று காணாமல் போகிறார். இது தொடர்பாக காவல்துறை விசாரணையில் இறங்குகிறது. ராமச்சந்திரன் (ராம்ஸ்) மீது சந்தேகம் எழுகிறது.
இந்தசூழ்நிலையில், சேஷ்விதாவை கொலை செய்ததாக கூறி போலீசில் சரணடைகிறார் தருண் விஜய். மேலும் சிலரை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளிக்கிறார். தருண் விஜய் கொலை செய்ததாக கூறப்படும் நபர்கள் உயிருடன் இருப்பதை போலீசார் அறிகிறார்கள்.
உயிருடன் இருப்பவர்களை கொன்றதாக தருண் விஜய் சொன்னது ஏன்? சேஷ்விதா என்ன ஆனார்? என்பதே மீதி கதை.
அறிமுக நாயகன் தருண் விஜய் மிக அழகாகவும் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற கதாநாயகனுக்கு உள்ள அனைத்து அந்தஸ்துகளும் உடைய நாயகனாக நமக்கு தெரிகிறார். நடிப்பிலும் சரி புதிது போல் இல்லை.
மகள் சேஷ்விதாவின் மீது அதிக பாசத்தை வெளிப்படுத்தும் காட்சியில் மதுசூதனன் ராவின் நடிப்பு மெச்சத்தகுந்தது. சேஷ்விதா பயத்தில் பதறும் உணர்வுகளை முகத்தில் அள்ளித் தெரித்திருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே முகத்தை காட்டும் ராம்ஸின் வில்லத்தனம் பெண்களின் வெறுப்பை அள்ளிக் கொண்டு போகிறார்..
இசையமைப்பாளர் கரண் பி.க்ருபா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பயணித்திருகிறது.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸின் பார்வையாளர்களை பீதியடைய செய்தாலும், கதைக்களத்தோடு பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது.
ஒரு பெண் காணாமல் போகும் சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, யூகிக்க முடியாத திருப்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் நோஹா ஆம்ஸ்ட்ராங். பெண் கடத்தல் வழக்கு கொலையாக மாறி, குற்றவாளி சரண்டர் ஆன பிறகு நடக்கும் திருப்பமான காட்சிகள், பதட்டமான மனநிலையை ஏற்படுத்தி விறுவிறுப்பான வேகமான மர்ம முடிச்சுக்களான தருணங்களை வழங்கி க்ளைமேக்சில் திருப்பத்துடன் முடித்திருக்கிறார் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங்.









