படையாண்ட மாவீரா என்பது காடுவெட்டி குருவுக்கு டாக்டர் ராமதாஸ் கொடுத்த பட்டம். அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியுள்ளது. காடுவெட்டி குருவை ‘ரவுடி’ அல்லது ‘சாதி வெறியன்’ என்ற பிம்பத்திலிருந்து எடுத்து, மக்கள் நலனுக்காக போராடிய மனிதராக சித்தரிக்க முயன்றுள்ளார் இந்தப்படத்தை இயக்கி காடுவெட்டி குரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ள வ.கௌதமன்.
பள்ளியில் படிக்கும் மாணவன் காடுவெட்டி குரு அதாவது அதில் நடித்துள்ள கௌதமனின் தந்தை சமுத்திரகனி அந்தப் பகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து பெரிய மனிதராக வலம் வருகிறார். தந்தையை பின்பற்றி தனது சமூகத்தை மட்டுமின்றி, அனைத்து சமூகத்தையும் சமமாக கருதி உதவி செய்யும் ஆளுமை படைத்த ஒரு தலைவராகவும் பாதுகாவலராகவும் மாறுகிறார்.
அவரது அசுர வளர்ச்சி, அரசியலில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. முதலாளிகள் தரப்பில் இருந்து அழுத்தமும் மிரட்டலும் தரப்படுகிறது. அதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இறுதியில் காடுவெட்டி குரு மக்களின் நலனுக்காக பாடுபட்டு என்ன நிலைமைக்கு உள்ளானார்? அவர் முன்னெடுத்த காரியங்கள் வெற்றி பெற்றதா? என்பது மீதிக்கதை
நடிகராக, இயக்குனராக வ.கெளதமன் ஒரு மிகபெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.. நடிப்பை பொறுத்தவரை சண்டைக் காட்சிகளிலும் உணர்ச்சி வசனங்களிலும் தீவிரமாக நடித்து விஜயாகந்த்தை கண் முன் நிறுத்துகிறார். ஆனாலும் பல இடங்களில் மிகை நடிப்பு எட்டி பார்க்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னாடாவுக்கு பெரிய வேலை இல்லை. சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சியில் தலை காட்டுவதோடு சரி.
காடுவெட்டி குருவின் தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, குறைவான காட்சிகளில் வந்தாலும், தனது வழக்கமான பாணியிலான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
மக்களுக்கு உதவி செய்ய தூண்டும் விதமாக மகனை வளர்க்கும் தாயாக சரண்யா நடித்துள்ளார்.மேலும் இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா ஆகியோரு ம் நடித்திருக்கிறார்கள்.
வைரமுத்து பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் மற்றும் சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் அசத்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் கோபி ஜகதீஸ்வரன் முந்திரிக்காட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்பையும் கச்சிதமாக படம்பிடித்துள்ளார்.
வன்னியர் இன மக்களுக்காக பெரிதாக களமாடிய படைவீரர் அவர். ஆனால் பொருளாதார ரீதியாக எதையும் அவர் சம்பாதிக்கவில்லை. அவரின் மரணத்தின் போது மிகவும் கஷ்டத்தையே அனுபவித்தார். இவையெல்லாவற்றையும் படமாக்கியுள்ளார் இயக்குநர் கெளதமன். ஆனால் குருவுக்கு செய்யயப்பட்ட அரசியல் துரோகத்தை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டது ஏனோ தெரியவில்லை.
அதேசமயம் எந்தவித வன்முறையையையும் தூணடாத அனைத்து சாதியினையும் அரவணைத்து செல்லும் விதமாக இந்த படத்தை கொடுத்த இயக்குனர் கௌதமனுக்கு பாராட்டுக்கள்.
.









