
தனது மகன் வெற்றி மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார் பிறப்பு. அவனை வேலைக்கே அனுப்பாமல் அரசனின் மகன் போல் சொகுசாக வளர்க்கிறார் பிரபு. பார்த்துப் பார்த்துப் பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் வெற்றி, உண்டியல் பணத்தைப் பட்டுவாடா செய்யும் தொழிலில் ஈடுபட்டுப் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்.. தனது மகனை அப்பிரச்சனையில் இருந்து பிரபு மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
நாயகன் பட்டமுத்துவாக வெற்றி நடித்திருக்கிறார். கதைகளைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பவர் என பெயர் பெற்றிருக்கும் வெற்றி, அதே கவனத்துடன் இந்த அப்பா – மகன் பாசக்கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். ஒரு கிராமத்து இளைஞராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்
படத்தின் மிகவும் முக்கியமான தூணாக வந்து நிற்கிறார் பிரபு. இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் சரியான பொருத்தம் என்று கூறும் அளவிற்கு பிரபு தனது கேரக்டரில் தனித்து நிற்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் பிரபு. .
தனது அறிமுக படத்திலேயே அனைவரையும் வியந்து பாராட்டும்படி தனது நடிப்பின் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகி கிருஷ்ணபிரியா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையிலும் மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், கோமல் குமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை ஆகியோர் நடிப்பு சிறப்பு வில்லனாக நடித்த கோமல் குமார், க்ளைமாக்ஸ் தவிர மற்ற இடங்களில் பில்-டப் மட்டுமே செய்துள்ளார். தங்கதுரையின் காமெடி நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.
வைரமுத்து, மோகன் ராஜன் பாடல் வரிகளில் நௌஃபல்; ராஜா இன்னிசை துல்லியமாக ரசிக்க வைத்து பின்னணி இசையும் கவனிக்க வைத்து ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி ராமநாதபுரத்தின் வறட்சியையும், பாழடைந்த கட்டிடம், 90களில் இருக்கும் வீடுகள், தெருக்கள், பேருந்து, கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை தன் காட்சிக்கோணங்களால் சிறப்பாக செதுக்கியுள்ளார்.
அப்பா – மகன் இருவருக்குமான பாசப் பிணைப்பை ஒரு வாழ்வியல் கலந்த திரைக்கதையோடு மிகவும் அழகாக நகர்த்திச் சென்று ஒரு தரமான படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகா கந்தன்..
.
.









