
அருவி படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. பக்கா அரசியல் படம்.. ஆனால் அரசியல்வாதிகளின் படம் அல்ல.. அரசியல் புரோக்கர்களின் அரசியல் பற்றிய படம்.
தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை கச்சிதமாக செய்து முடிக்க கூடியவர். தனது பெயர் வெளிவராமல் எவ்வளவு பெரிய சம்பவமாக இருந்தாலும், அதை கச்சிதமாக செய்து முடிக்கும் சாணக்கியத்தனம் கொண்ட விஜய் ஆண்டனி இன்னொரு பக்கம் தங்களின் அத்தியாவசிய வாழ்வாதாரத்திற்காக அரசை அணுகும் ஏழை எளிய மக்களை மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பண பலனாக வழங்குகிறார்.
இப்படி நன்றாக சென்று கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் வாழ்க்கை ஒரு மத்திய அமைச்சருக்கு வேலைப்பார்த்து தரும்பொழுது மாட்டிக்கொள்கிறார். இந்த ஒரு பிரச்சனையால் இதற்கு முன் இவர் வேலைப்பார்த்த நபர்களுக்கும் சிக்கல் ஏற்பட அனைத்து தரப்பும் அவரை ரவுண்ட் கட்ட, இதிலிருந்து விஜய் ஆண்டனி எப்படி மீண்டார் என்பதே மீதிக்கதை
கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி இயக்குநர் சொன்னதை நல்ல பிள்ளையாக அப்படியே செய்துள்ளார். இந்தப்படத்தில் அவரின் உடல்மொழிக்கேற்ப அவரின் கதாபாத்திரம் அமைந்துள்ளது.
வில்லனாக நடித்திருக்கும் சுனில் கிர்பலானி ஒரு களத்தில் பாரதிராஜாவின் காதல் ஓவியம் படத்தில் கதாநயகனாக நடித்தவர். இந்தப்படத்தில், சமகால அரசியல் நிகழ்வுகளையும், அதன் பின்னணியில் இருக்கும் வியாபாரத்தையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது திமிரான பேச்சும், உடல் மொழியும் அவரது கதாபாத்திரத்தை கவனிக்க வைக்கிறது.
வேம்பு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை திருப்தி ரவீந்தரா – இயக்குநர் சொன்னதை நேர்த்தியாக செய்திருக்கிறார். வாகை சந்திரசேகர் சிறந்த தேர்வு, மிடுக்கான தோற்றத்தில் மிரட்டியுள்ளார்
விஜய் ஆண்டனி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும் பாடலிசையும் கூட சிறப்பாக கனமாக இருக்கிறது .
முதல் பாதி சுறுசுறுப்பாக சென்று, அரசியல் அலுவலக லாபி, ஒப்பந்தங்கள், அதிகாரிகளின் குணாதிசயங்களை கூர்மையாக வெளிப்படுத்துகிறது. தற்போதைய காலகட்டத்தில் வரும் அரசியல் பிரபலங்கள், அரசியல் நிகழ்வுகள் என அனைத்தையும் இந்த படத்தில் சுட்டிக்காட்டிருப்பது பார்வையாளர்களுக்கு கனெக்ட் செய்யும் வகையில் இருக்கிறது. Anthavithamaaka எழுதி இயக்கியிருக்கும் அருண் பிரபு, சமகால அரசியல் மற்றும் மறைமுக அரசியல் வியாபாரத்தை அப்பட்டமாக சொல்லியிருக்கிறார். .









