Reviews

சல்லியர்கள் ; விமர்சனம்


சல்லியர்கள் என்றால் மருத்துவர்கள் என்று அர்த்தம். அப்படி ஈழப் போராட்டத்தின் போது காயம் பட்ட வீரர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட தன்னலமற்ற மருத்துவர்கள் பற்றிய படம் தான் இந்த சல்லியர்கள்.

சிங்கத்தீவு பகுதியில் நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் அவ்வப்போது பல வீரர்கள் காயப்படுகின்றனர். அவர்களை மருத்துவர்கள் ஆன செம்பியன், பெண் டாக்டர் சத்திய தேவி ஆகியோர் விறுவிறுப்பாக செயல்பட்டு அவர்கள் உயிரை பாதுகாக்கின்றனர். இதற்காக பதுங்கு குழியில் சிறிய மருத்துவமனை அமைத்து செயல்படுகின்றனர். தங்களுடைய ஆட்களை மட்டும் அல்ல எதிரிகள் காயம் பட்டிருந்தாலும் கூட அவர்களுக்கும் மனிதநேயத்துடன் சிகிச்சை அளிக்கின்றனர்.

ஆனால் சிங்கத்தீவு ராணுவமோ இப்படி பதுங்கு குழியில் செயல்படும் மருத்துவமனைகளை வெடி வீசித் தாக்கி அழிக்க நினைக்கிறது. அப்படி ஒரே நேரத்தில் பல இடங்களில் இது போன்ற பதிவுகளை மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துகிறது சிங்கத்தீவு ராணுவம். இந்த தாக்குதலில் இருந்து போராளிகள் தப்பித்தார்களா ? என்ன நடந்தது என்பது மீதி கதை.

படத்தின் முதுகெலும்பாக வரும் சத்யாதேவி, ‘இப்படியும் நடிக்க முடியுமா?’ என வியக்க வைக்கிறார். கண்களிலேயே வசனம் பேசுகிறார். அவருடைய அமைதியான உறுதியான உண்மையான ஆழமான நடிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது

மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன், தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார்.

மதிழயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேது கருணாஸ், பேசும் வசனங்கள் அனைத்தும், அம்மக்களின் உணர்வுகளை உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது.

சிங்களப் படையினராக நடித்திருக்கும் திருமுருகன்,சந்தோஷ்,மோகன் ஆகியோர் பொருத்தமாக நடித்து வெறுப்பைச் சம்பாதிக்கிறார்கள்.

சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவில் யுத்தக் காட்சிகளை படமாக்கிய விதம் போர்க்களத்தில் நாமே இருப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.

கென் மற்றும் ஈஸ்வர் ஆகியோரது இசையில், வைரமுத்து மற்றும் தி.கிட்டு ஆகியோரது வரிகளில் பாடல்கள் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியுள்ளன

இலங்கைத் தமிழர்களின் போராட்ட காலகட்டத்தில், போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு, அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதை படம் மிக அழகாக சொல்லிச் செல்கிறது. எழுதி இயக்கியிருக்கும் டி.கிட்டு, தமிழ் ஈழ விடுதலை போராளிகள் பற்றி இதுவரை சொல்லப்படாத விசயங்களை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதோடு, தமிழ் ஈழ போராளி மருத்துவர்களின் வாழ்வியலை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்

.