Reviews

சாத்தான் தி டார்க் – விமர்சனம்


மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கிய சாத்தான் ; தி டார்க் சமூகத்தில் நிலவும் பில்லி சூனியம் மற்றும் தவறான நம்பிக்கை முறைகளின் ஆபத்தான தாக்கத்தை ஆராயும் ஒரு ஹாரர் படமாக வெளியாகி உள்ளது.

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள இக்கதை, கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் அஸ்தினாபுரத்தில் தோல்வியடைந்த ஒரு சூனிய சடங்கால் ஏற்படும் சாபம், தலைமுறை தலைமுறையாகத் தொடர்வதை விவரிக்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் மலைப்பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் நடந்த ஒரு மாந்திரீகச் சடங்கு தோல்வியடைந்து, ஒரு இருண்ட சாபம் உருவாகிறது. தற்காலத்தில், மார்சலின் (மோனா பெட்ரே) என்ற பெண் ஒரு மர்மமான சக்தியால் ஆட்கொள்ளப்பட்டு, ரத்தவெறி பிடித்தவளாகத் தன் மகள் அலிஷா (ஆய்ரா பாலக்) மற்றும் ஊர் மக்களைத் துன்புறுத்துகிறாள்.

இதன் பின்னியில் முற்காலத்தில் வாழ்ந்த சாந்தினி தமிழரசனின் பங்கு ஆதிக்கம் இருப்பது தெரிய வருகிறது. அது ஏன் ? எதற்காக ? என்பதை கண்டுபிடிக்க அலிஷாவின் மீது விருப்பம் கொண்ட அவளது பள்ளித் தோழன் சகார் (ஃப்ரெட்ரிக் ஜான்), அவளை இந்தத் தலைமுறைத் தலைமுறையாகத் தொடரும் சாபத்திலிருந்து எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதே

கதை தற்காலத்திற்கு நகரும்போது, சாத்தானிய நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளில் ஊறிய ஒரு கிராமத்தை மையப்படுத்துகிறது.. அந்த கிராம மக்களிடையே, சாந்தினி தமிழரசன் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்ட ஒரு பெண்ணாகத் தனித்து நிற்கிறார்.. அவரது கணவர் படுத்த படுக்கையாக மாறும்போது அவரது வாழ்க்கை ஒரு சோகமான திருப்பத்தைச் சந்திக்கிறது..

தீவிரமான பக்தி இருந்தபோதிலும், அவரது துயரத்திற்கு எந்த தீர்வும் கிடைக்காத நிலையில், அவர் ஒரு இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகிறார். தன் கணவனைக் காப்பாற்றுவதற்காக, கடவுள் நம்பிக்கையிலிருந்து விலகி இருண்ட சக்திகளிடம் சரணடையும் அவரது மனமாற்றம் இப்படத்தின் உணர்ச்சிகரமான மையக்கருவாகும்.

ஃப்ரெட்ரிக் ஜான் மற்றும் ஆய்ரா பாலக் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் பயத்தையும் பதற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். சாத்தானை வழிபடும் பெண்ணாக வந்து தன் நாக்கையே அறுத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாந்தினி தமிழரசன், இந்தப் படத்தில் உண்மையிலேயே அச்சத்தை ஏற்படுத்தும் ஒரே நபர் ஆவார். மோனா பெட்ரே, ஸ்ரீஜா ரவி மற்றும் எட்வர்ட் ஆகியோர் தகுந்த நடிப்பை வழங்கியுள்ளனர்

பாலாஜி ராமசாமியின் ஒளிப்பதிவு படத்தின் பயங்கரமான மற்றும் திகில் கலந்த சூழலைத் தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளது. அஸ்வின் கிருஷ்ணாவின் இசையும் பின்னணி இசையும் முக்கியக் காட்சிகளுக்குத் தீவிரத்தை சேர்க்கின்றன. ராஜ்குமார் மற்றும் கோவை அபிஷேக்கின் படத்தொகுப்பு கதையைச் சீராக நகர்த்துகிறது.

எதிர்மறையான எண்ணங்களும் பயமும் சமூகத்தில் எவ்வளவு விரைவாகப் பரவுகின்றன, ஆனால் நேர்மறை எண்ணங்கள் வளர எவ்வளவு காலம் எடுக்கிறது என்ற கருத்தைச் சொல்ல முயல்கிறது. படம் முழுக்க இருண்ட கருப்பொருள்களைக் கொண்டிருப்பதாலும், ஒரு மகிழ்ச்சியான கதையை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். இருப்பினும், நம்பிக்கை, விரக்தி மற்றும் அதன் விளைவுகள் பற்றிய ஒரு சுவாரஸ்யமான பார்வையை இது வழங்குகிறது. சிறந்த நடிப்பு மற்றும் தொழில்நுட்ப பலத்துடன், ஹாரர் மற்றும் அமானுஷ்ய கதைகளை விரும்புவோருக்கு இது ஒரு நல்ல அனுபவத்தைத் தரும்.