
தனக்கு திருமணம் செய்வதற்காக பார்த்த பெண் நித்யா மேனனை காதலித்து திருமணம் செய்கிறார் விஜய்சேதுபதி. கல்யாணம் ஆன பின்பு வழக்கமாக எல்லாக் குடும்பங்களிலும் நடப்பது போலவே மாமியார் மருமகள் சண்டை உட்பட எல்லா விசயங்களும் நடக்கின்றன..அதனால் கணவன் மனைவி ஆகிய இருவரும் பிரிய நேர்கிறது.
.
மூன்று மாதங்களாகப் பிரிந்து இருக்கும் நிலையில் கணவனுக்குத் தெரியாமல் தனது மகளுக்கு முடி இறக்க , தன் பெற்றோரோடு குலதெய்வம் கோவிலுக்கு வருகிறார் நித்யா மேனன் பிறகென்ன ? உறவுகளுக்குள் கடும் வாய் தகராறு.. தொடர்ந்து கைகலப்பு. கடைசியில் .பிரிந்தவர்கள் கூடினார்களா? இல்லையா? என்பது மீதிக்கதை.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இப்படத்திலுமே அதையே கொடுத்திருக்கிறார். ஆகாச வீரன் என்ற கதாபாத்திரமாகவே படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி.
நித்யா மேனன் பற்றி சொல்லவே வேண்டாம். மனுஷி வழக்கம் போல இதிலும் சம்பவம் செய்கிறார். கோபம், கண்ணீர், காதல் என எல்லா உணர்வுகளிலும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு நித்யா செமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
சித்திரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, வரும் காட்சிகள் அனைத்திலும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பதற்காகவே தனியாக பாராட்டலாம்.க்கிறார். நாயகனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சரவணன் – தீபா சங்கர், நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் செம்பன் வினோத் – ஜானகி சுரேஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, வினோத் சாகர், ரோஷினி, செண்ட்ராயன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களது வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
வண்ணமயமாகக் காட்சிகளை அமைத்து படத்தை ம்கிழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் பெரிதாக படத்திற்கு உதவவில்லை ஆனால், பொட்டல முட்டாயே பாடலை கம்போஸ் செய்த விதம் சூப்பர்.
இயக்குநர் பாண்டிராஜ் இந்தப் படத்தில் குடும்ப உறவுகளின் மனோநிலை அதனால் ஏற்படும் விளைவுகள், சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் சின்னச் சின்ன விசயங்கள் ஒருங்கிணைந்து எவ்வளவு பிரச்சனையாக மாறுகிறது என பல நுட்பமான விசயங்களைச் சொல்லியிருக்கிறார். கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டை, காதல் என சிறிய ஒன்லைன் என்றாலும் அதை எடுத்துச் சென்ற விதத்திற்காக இயக்குனர் பாண்டிராஜை வெகுவாக பாராட்டலாம்.









