Reviews

மாரீசன் – விமர்சனம்

மாமன்னன் என்ற மெகா ஹிட் பிறகு பகத் பாசில், வடிவேலு மீண்டும் இணைந்து நடித்து வெளிவந்துள்ள படம் மாரீசன். அதேபோன்ற வரவேற்பை, வெற்றியை இந்தப்படம் பெற்றதா? பார்ப்போம்.

திருடனான பகத் பாசிலும், வயதான நபரான வடிவேலும் ஒன்றாக பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வடிவேலுவிடம் பணம் இருப்பதை தெரிந்துக் கொள்ளும் பகத் பாசில், அவரிடம் இருக்கும் பணத்தை பறிப்பதற்காக அவருடன் தொடர்ந்து பயணிக்கிறார். ஆனால், பகத் பாசிலுடன் பயணித்தாலும், அவருக்கே தெரியாமல், அவரது அடையாளங்களைப் பயன்படுத்தி சிலரை தேடிப் பிடித்து வடிவேலு கொலை செய்கிறார். வடிவேலு யார்?, அவர் செய்யும் கொலைகளுக்கும், பகத் பாசிலுக்கும் என்ன தொடர்பு ? என்பதே படத்தின் மீதிக்கதை.

பகத் இந்த மாதிரி ரோல் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல் போல அவருக்கு, மிக கேஷ்வல் ஆக அவர் செய்யும் திருட்டு வேலை உண்மையாகவே இவர் நடிக்கிறார, இல்லை அப்டியே இருக்கிறாரே என கேட்க தோன்றுகிறது. துறுதுறு நடிப்போடு வலம் வரும் பகத் பாசில், வடிவேலுக்கு துணையாக பயணித்திருக்கிறார்.

நகைச்சுவை மட்டுமின்றி அழுத்தமான நடிப்பையும் என்னால் கொடுக்கமுடியும் என்று மாமன்னன் படத்தை தொடர்ந்து இதிலும் நிரூபித்திருக்கிறார் வடிவேலு. இந்தப்படத்தில்.மறதி நோயாளர் கதாபாத்திரத்தில் முழுமையாகப் பொருந்தியிருக்கிறார். இதற்கு முன் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தில் எந்த ஒரு சாயலும் இந்த படத்தில் இல்லை.

வடிவேலு மனைவியாக சித்தாரா, நண்பன் நெட்வொர்க் கணேஷ் என்கிற அருணாக மாறுபட்ட கோணத்தில் வியக்க வைக்கும் விவேக் பிரசன்னா ஆகியோர் இரண்டாம் பாதியில் கதையின் கோணத்தை மாற்றி திருப்புமுனையாக அமைந்துள்ளனர்.

போலீஸ் அதிகாரியாக அசால்டாக மிரட்டும் கோவை சரளா, ஃபகத் ஃபாசிலின் தாயாக ரேணுகா, நண்பராக லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா மற்றும் பலர் படத்தின் கதைக்கு தங்களின் சிறு பங்களிப்பை கொடுத்திருந்தாலும் முக்கியத்துவத்தில் பெரிதும் கவர்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சொல்லும்படியாக இல்லை என்றாலும், இளையராஜாவின் சில பாடல்கள் சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய திரைக்கதை அமைந்திருப்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி.

இயக்குனர் சுதீஷ் சங்கர் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரிடம் இருந்தும் 200 சதவீத நடிப்பை வாங்கியுள்ளார். படத்தின் முதல் பாதி ஆஹா சூப்பர் ட்ராவல் பீல் குட் படத்திற்கு தான் வந்துள்ளோம் என நினைக்க வைத்து, இடைவேளையில் வரும் டுவிஸ்ட் கதைக்களத்தையே மாற்றுகிறது. சமுதாயத்தில் நடக்கும் ஒரு முக்கிய சிக்கலைப் பற்றிப் பேசி கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்…