
யூடியூப் சேனல் நடத்தும் தம்பதியர் கலையரசன் மற்றும் பிரியாலயா அந்த வருமானத்தில் பெரிய பங்களா, மற்றும் ஒரு கார் என வசதியாக வாழ்கின்றனர். ஒரு நாள், அவர்களின் யூடியூப் சேனல் நீக்கப்பட்டு, எந்த வருமானமும் இல்லாமல் தத்தளித்து கடன் சிக்கல்களில் மாட்டுகின்றனர்.. என்ன செய்வது என்று அறியாமல் இருக்கும் தருணத்தில் அவர்களுக்கு ஒரு போன் வருகிறது. வீட்டில் இருந்தபடி நீங்கள் எங்கள் கேம் ஷோவில் கலந்து கொண்டால் உங்களுக்கு இரண்டு கோடி பரிசு கிடைக்கும் என மர்ம நபர் ஒருவர் கூற இருவரும் சம்மதிக்கின்றனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் தங்களது இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகும் போது தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டனரா ? இதனால் ஏற்படும் இழப்புகள் என்ன? இறுதி வரை போராடி ஜெயித்தார்களா? தோற்றார்களா? போட்டி பணம் கிடைத்தா? என்று சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் கையாள்வதே ட்ரெண்டிங் படத்தின் முடிவு.
கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன் மற்றும் கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா இருவரும் முழுப்படத்தையும் தங்களது நடிப்பால் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். கலையரசன் இயல்பான நடிப்பில் காதல், கோபம், சோகம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். நாயகி பிரியாலயா கதையுடன் இணைந்து சிறப்பாக நடிக்கிறார்.
க்ளைமாக்ஸில் வரும் திருப்பத்திற்கு முக்கிய புள்ளியாக விளங்கும் பிரேம் குமாரின் இருப்பு திரைக்கதையில் வலிமையைச் சேர்த்துள்ளன. பெசன்ட்; நகர் ரவி, வித்யா போர்கியா மற்றும் சிவன்யா ஆகியோரின் வருகை திரைக்கதைக்கு உதவுகிறது.
ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும் வெவ்வேறு கோணங்கள் மூலம் காட்சிகளில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ரியாலிட்டி ஷோ விளையாட்டினால் ஏற்படும் விபரீத விளைவுகளை கதையாக கொண்டு யாரும் யூகிக்க முடியாத திருப்பமான முடிவுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சிவராஜ், தங்களது அன்றாட வாழ்வியல் சம்பவங்களை பகிர்ந்துக் கொள்வதோடு, சில அந்தரங்க விசயங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் அவலங்களும் நடந்து வருகிறது. அத்தகைய மனிதர்களுக்கு அறிவுரையாக மட்டும் இன்றி ஒரு எச்சரிக்கை மணியும் அடித்துள்ளார்..
.
.









