Reviews

ஃப்ரைடே ; விமர்சனம்


மிகப்பெரிய ரவுடியான மைம் கோபி அரசியலில் இறங்க நினைக்கிறார். தனக்கு எதிராக இருக்கும் இன்னொரு ரவுடியை போட்டு தள்ளினால் தான் அந்த பதவி தனக்கு கிடைக்கும் என்பதால் தனது ஆட்களான அனீஸ் மாசிலாமணி அன் கோவிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார்.

அந்த சம்பவம் செய்யும் போது கூடவே இருக்கும் கேபிஒய் தீனாவினால் அந்த ஸ்கெட்ச் மிஸ் ஆகிறது. கத்திக்குத்து பட்ட தீனாவை காப்பாற்றி பத்திரமாக ஓரிடத்தில் வைத்து பாதுகாக்கிறார் அனீஸ் மாசிலாமணி. ஆனால் எதிர்பாராத விதமாக தீனாவே மாசிலாமணிக்கு ஸ்கெட்ச் போட்ட விவரம் தெரியவர அவருக்கு மட்டுமல்ல நமக்கும் அதிர்ச்சி தான்.

அப்பாவி போல இருக்கும் தீனா எதற்கு கூடவே இருக்கும் அனீசுக்கு ஸ்கெட்ச் போட்டார் ? தீனாவின் பின்னணி என்ன ? அனீஸ் தப்பினாரா ? மைம் கோபி நினைத்தது நடந்ததா என்பது விறுவிறுப்பான மீதிக்கதை.

மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனீஸ் மாசிலாமணி புதியவர் என்றாலும் கூட வெகு யதார்த்தமாக, அமைதியான ஒரு ரவுடியாக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். சண்டை காட்சிகலிலும் சிறப்பு செய்திருக்கயார்.

கலகலவென காமெடியாக போலந்து கட்டும் கேபிஒய் தீனா இந்த படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்குள் தன்னை புகுத்திக் கொண்டு அந்த சீரியஸான கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்..

அளவெடுத்து தைக்கப்பட்ட சட்டை போல அந்த தாதா கதாபாத்திரத்தில் வழக்கம் போல மைம் கோபி மிகச் நடித்திருக்கிறார் மைம் கோபி. அதேபோல ராமச்சந்திரன் துரைராஜ், பெண் காவல் அதிகாரி, கலையரசன், சித்ரா சேனன், சித்து குமரேசன் என பலரும் கவனம் ஈர்க்கிறார்கள்,.

படம் முழுக்கவே இரவில் நடக்கும் கதை என்பதால் தனது வித்தியாசமான கேமரா கோணங்களால் யார் இந்த மனிதர் என வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ். கன்னியாகுமரி மாவட்டத்தின் இரவு நேர அழகை தனது கேமராவால் அள்ளி வந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த படத்திற்கு பின்னணி இசையில் மெருகூட்டி இசையமைப்பாளர் டுமேவுக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள். .

வழக்கமான ரவுடியிச கதை தானே என்று நினைத்து படம் பார்க்க அமர்ந்தாலும் வித்தியாசமான பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை என ஓரளவு நம்மை இருக்கையிலேயே கட்டிப்போட முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஹரி வெங்கடேசன்,.. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். இரு தரப்புக்கும் உள்ள முன்பகை, மோதல், யார் பெரியவர் என்கிற ஈகோ இவைதான் ரவுடிகள் மற்றும் கூலி படையினர் உருவாக காரணம் என்பதை இதில் வேறொரு பின்னணி காரணம் கொண்டு சொல்லி இருக்கிறார்