
கரூர் அருகே ஒரு கிராமத்தில் கதை நகர்கிறது. எந்த வேலைக்கும் செல்லாமல், பேருந்து வரும் போகும் பெண்களை சைட் அடித்துக் கொண்டு, ஊர் சுற்றி வருவதையே தனது வேலையாக வைத்துக் கொண்டிருப்பவர் நாயகன் விஜய் கெளரிஷ்.
இவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் புதிதாக வந்து குடியேறுகிறார் ஸ்மேகா. இவரைக் கண்டதும் அவர் மீது வழக்கம் போல் தனது காதல் வலையை வீச ஆரம்பிக்கிறார் விஜய் கெளரிஷ். மறுபுறம், விஜய் கௌரிஷின் நண்பர் ஆதர்ஷ், ஸ்மேஹாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறுகிறார். ஸ்மேஹா விஜய் கௌரிஷின் காதலை ஏற்றுக்கொள்கிறார், ஆனால் மறுபுறம், தானும் ஆதர்ஷை காதலிப்பதாக அவரிடம் கூறுகிறார்.
இரண்டு நண்பர்களும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள் என்பது தெரியாமல் காதலிக்கும்போது, உண்மை வெளிப்படுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இருவரும் ஸ்மேஹாவைத் தனித்தனியாகச் சந்திக்கும்போது, அந்தப் பெண் இன்னும் முட்டாள்தனமான முறையில் அவர்களுக்குப் பதிலளித்து, இருவரையும் காதல் நிலையில் விட்டுவிடுகிறாள். அவர் அப்படிச் செய்ய என்ன காரணம்? அவர் உண்மையிலேயே காதலிக்கிறாரா? இல்லையா? ‘கடுக்கா’ படத்தின் கிளைமாக்ஸ்
காதலுக்காக ஏங்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி, அவமானப்பட்டாலும் விடாது துரத்துவதும், காதலியின் குழப்பமான செயலால் என்ன செய்வதென்று தெரியாமல் முழிப்பது, நண்பனை எதிரியாக பாவித்து நடந்து கொள்ளும் செயல் என்று நகைச்சுவை கலந்த நடிப்பில் கவனிக்க வைக்கிறார் விஜய் கௌரிஷ்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேஹா, பக்கத்து வீட்டுப் பெண் போல் எளிமை.இந்த காலத்துப் படிக்கும் பெண்களின் விருப்பங்களை மட்டுமல்ல மனக்குமுறல்களையும் தனது பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
மற்றொரு நாயகனான ஆதர்ஷ், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் இயல்பாக நடித்து கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் மஞ்சுநாதன், நடிப்பில் கோயம்புத்தூர் பாஷையில் பொளந்து கட்டுகிறார். மணிமேகலை, சுதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் இயல்பாக நடித்து கதைக்களத்திற்கு இயல்பு சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கெவின் டி,கோஸ்டா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் என்றே கூறலாம் ஒளிப்பதிவாளர் சதிஷ் குமார் துரைகண்ணு, கதை மாந்தர்களையும், கதைக்களத்தையும் மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.எஸ்.முருகராசு, கதா பாத்திரங்களை கையாள்வதிலும் சரி… நகைச்சுவையாக வசனங்களை எழுதி இருப்பதிலும் சரி… படு இயல்பாக கண்முன் ஒரு வாழ்க்கையை பார்த்த நிறைவு ஏற்படுகிறது.
முக்கோணக்காதல் கதையாக விளையாட்டுத்தனமாக தொடங்க, அதன் பின் காதலுக்காக பிரியும் நண்பர்கள், காதலி யாரை காதலித்தார் என்கிற சஸ்பென்ஸ், இறுதியில் அதற்கான உண்மையான காரணத்தை விவரிக்கும் திரைக்கதை அமைத்து கலகலப்பு கலந்து விறுவிறுப்புடன் அழுத்தமான முத்திரையை முதல் படத்திலேயே பதித்து விட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.முருகராசு..









