
போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிய கான்ஸ்டபிளாக பொறுப்பெற்க வரும் அதர்வாவுடன் சேர்த்து ஆறு பேர் காவல் நிலையத்திற்கு வருகின்றனர். அன்றைய இரவு ரோந்து பணிக்கு செல்லும் அதர்வா மற்றும் குழு அங்கே உள்ள குடிசை பகுதிக்குள் அவர்கள் அஷ்வின் காக்கமனு தலைமையில் சில சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் சதித்திட்டங்கள் நடைபெறுவதை பார்க்கிறார்கள்.
ஆனால் அங்கிருக்கும் அடியாட்களால் அதற்வாவுடன் வந்த காவலர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகிறார்கள். அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் அதர்வா அங்கே, தன் காதலி லாவண்யா திரிபாதியும் கைதியாக இருப்பதையும் அறிந்து அதிர்ச்சியாகிறார்.
அந்த குடியிருப்பு பகுதியில் நடக்கும் சதி வேலைகள் என்ன? அவர்கள் யாரை குறி வைத்து பழி வாங்க காத்திருக்கிறார்கள்? அஸ்வின் கக்கமனு யார்? , அவரது சதி திட்டம் என்ன ? இதில் சம்மந்தமே இல்லாத அதர்வா எப்படி சிக்கினார் ஆகிய கேள்விகளுக்கான பதிலை மீதிகதை சொல்கிறது.
வழக்கமான ஹீரோவுக்குரிய பில்டப்புகள் ஏதுமின்றி சராசரி நாயகனாக மட்டுமே வரும் அதர்வா, அந்தப் பாத்திரத்தை மிகச் சரியாக உள்வாங்கி நடித்திருக்கிறார். அதேசமயம் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
போலீஸ் என்றாலே கொலைவெறியுடன் தாக்கும் கேரக்டரில் அஸ்வின் காகுமனு, வில்லத்தனத்தில் தனி முத்திரை பதித்துள்ளார். வில்லன் என்று சொல்வதை விட மற்றொரு நாயகன் என்று தான் அஸ்வினை சொல்ல வேண்டும் அவர் வரும் காட்சியில் எல்லாம் பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் லாவண்யா திரிபாதிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் வரும் காட்சிகளில் எல்லாம் தனது அழகால் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார்.
ஷா ரா, பாரத், லக்ஷ்மி பிரியா, பரணி, அழகம் பெருமாள் மற்றும் பலர் படத்திற்கு அச்சாணிகளாக இருந்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
இரவு நேரம், அடர்ந்த குடிசைப்பகுதி இவை இரண்டையும் படம் பார்ப்பவர்களே பதற்றம் அடையும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. .
ஒரே இடத்தில் நகரும் கதைக்கு தன் பின்னணி இசை மூலம் வித்தியாசத்தை வெளிப்படுத்தி திரைக்கதையை எந்த இடத்திலும் தொய்வடையாமல் நகர்த்திச் சென்றிருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்









