மெய்ப்பட செய் ; விமர்சனம்

நம் நாட்டில் 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து இருந்தது. அத்துடன் இது போன்ற குற்றங்களில் ஈடுப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை ஒரு போது கிடைத்தில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகிறது. மேற்கண்ட இரண்டு சப்ஜெக்டுகளையும் கோர்த்து புது பார்வையில் மெய்ப்பட செய் என்ற பெயரில் ஒரு சினிமாவை வழங்கி இருக்கிறார்கள். அதாவது பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கொடுப்பதோடு, மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இப்படம்.

தஞ்சை கிராமமொன்றில் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ ஆதவ் பாலாஜி அதே ஊரில் இருக்கும் மதுனிகா மீது காதல் வயப்படுகிறார். வழக்கம்போல காதலுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு ஏற்பட்ட சூழலில், காதலியை திருமணம் செய்து கொண்டு அங்கிருந்து நண்பர்களுடன் சென்னைக்குப் புறப்படுகிறார். சென்னை வந்த இடத்தில் அவர்கள் தங்கியிருக்கும் அந்த வீட்டினால் பெரிய பிரச்சனையில் சிக்குகிறார்கள். பிரச்சினையில் இருந்து மீண்டால் போதும் என்று ஆரம்பத்தில் நினைப்பவர்கள் பிறகு அதை எதிர்த்து நின்று போராடுவதோடு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்காக களத்தில் இறங்குகிறார்கள். இறுதியில், அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘மெய்ப்பட செய்’.

ஹீரோவாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜிக்கு இது முதல் படம். ஆனால் காதல், செண்டிமெண்ட், சண்டைக் காட்சிகள் என்று அனைத்திலும் நேர்த்தியாக நடித்திருக்கிறார். நாயகி மதுனிகா சிறப்பாக நடித்துள்ளார்.

நாயகியின் தாய் மாமன் வேடத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ் செல்வம், வில்லன் வேடத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். ‘கட்ட கஜா’ என்ற தாதாவாக நடித்திருக்கும் ஆடுகளம் ஜெயபால் தனது மிரட்டலான கண்களாலேயே தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய தோற்றமும், வசன உச்சரிப்பும் வில்லன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

மேலும் நேர்மையான இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஓ.ஏ.கே.சுந்தர், நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணி, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா, நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என்று படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேலின் ஒளிப்பதிவும் இசையமைப்பாளர் பரணியின் இசையும் படத்திற்கு பலம்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கொடுப்பதோடு, மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் வேலன்.

மொத்தத்தில், ‘மெய்ப்பட செய்’ பார்க்க வேண்டிய படம்.